
பிரயாக்ராஜ்: மதம் மாற்றி தீவிரவாதச் செயல்களில் ஈடுபடுத்த உத்தரபிரதேசத்திலிருந்து கடத்தி வரப்பட்ட 15 வயது சிறுமியை போலீஸார் மீட்டுள்ளனர். இதுகுறித்து உ.பி. போலீஸ் துணை கமிஷனர் குல்தீப் சிங் குணாவத் கூறியதாவது: உத்தரபிரதேச மாநிலம் பிரயாக்ராஜ் மாவட்டம் பூல்பூர் பகுதியைச் சேர்ந்த 15 வயது சிறுமி ஒருவரை கடந்த மே 8-ம் தேதி 19 வயதான தர்க்சனா பானு என்பவர் கேரளாவுக்கு கடத்திச் சென்றுள்ளார்.
மதமாற்றம் செய்யவும், தீவிரவாதச் செயல்களில் ஈடுபடவும் அவரைக் கடத்திச் சென்றதாகத் தெரிகிறது. ஆனால் அந்த சிறுமி, பானுவிடமிருந்து தப்பித்து திருச்சூர் ரயில் நிலையத்துக்கு வந்து போலீஸாரிடம் தகவல் தெரிவித்து அங்கிருந்து தனது தாய்க்கு போன் செய்துள்ளார்.