
சென்னை: அனுமதியற்ற கல்வி நிறுவன கட்டிடங்களை வரன்முறைப்படுத்த அவகாசம் அளிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பாக அரசு வெளியிட்ட செய்திக்குறிப்பு: திட்டமில்லா பகுதிகளில் 2011-ம் ஆண்டு ஜன. 1-ம் தேதிக்கு முன்பு கட்டப்பட்டு இயங்கிவரும் அனுமதியற்ற கல்வி நிறுவனக் கட்டிடங்களுக்கு, வரன்முறைப்படுத்தும் திட்டத்தின் கீழ், இணையதளம் மூலம் விண்ணப்பிக்க மீண்டும் ஒரு வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. அதன்படி விண்ணப்பிப்பதற்கான அவகாசம் இன்று (ஜூலை 1) முதல் 2026-ம் ஆண்டு ஜூன் 30-ம் தேதிவரை ஓராண்டுக்கு நீட்டிக்கப்பட்டுள்ளது.