• July 1, 2025
  • NewsEditor
  • 0

பெங்களூரு: கர்நாடகாவில் காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளான‌ குடகு, மைசூரு, மண்​டியா ஆகிய இடங்களில் கடந்த மே மாதம் இரண்டாம் வாரத்தில் இருந்து கனமழை பெய்தது. இதனால் கிருஷ்ண​ராஜ​சாகர், ஹேமாவ​தி, ஹாரங்கி ஆகிய அணை​களுக்கு நீர்​வரத்து அதி​கரித்​தது. இதே​போல காவிரி​யின் துணை ஆறான கபிலா உற்​பத்​தி​யாகும் கேரளா​வின் வயநாட்​டிலும் கனமழை பெய்​தது. இதனால் மைசூரு​வில் உள்ள கபினி அணைக்கு நீர்​வரத்து தொடர்ந்து அதி​கரித்​தது. இதன் காரண​மாக காவிரி நீர்ப்​பிடிப்பு பகு​தி​களில் அமைந்​துள்ள கிருஷ்ண​ராஜ​சாகர், கபினி, ஹேமாவ​தி, ஹாரங்கி அணை​களின் நீர்​மட்​ட​மும் உயர்ந்​தது.

மண்​டியா மாவட்​டம் ஸ்ரீரங்​கபட்​ணா​வில் உள்ள கிருஷ்ண​ராஜ சாகர் நேற்று முன் தினம் இரவு முழு கொள்​ளளவை (124.80 அடி) எட்​டியது. இதையடுத்து முதல்​வர் சித்​த​ராமை​யா, துணை முதல்​வர் டி.கே.சிவகு​மார், அமைச்​சர்​கள் மகாதேவப்​பா, செலு​வ​ராய​சாமி ஆகியோர் நேற்று பிற்​பகல் 1.30 மணிக்கு கிருஷ்ண​ராஜ​சாகர் அணை​யில் உள்ள காவிரி அன்​னை​யின் சிலைக்கு பாகினா சமர்ப்​பணப் பூஜை செய்​தனர்.

Read More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *