
ஹைதராபாத்: ஆந்திரா மற்றும் தெலங்கானா ஆகிய இரு தெலுங்கு மாநிலங்களிலும் பாஜக மாநில தலைவர்கள் மாற்றப்பட்டுள்ளனர்.
பாரதிய ஜனதா கட்சியின் ஆந்திர மாநில தலைவராக புரந்தேஸ்வரியும், தெலங்கானா மாநில பாஜக தலைவராக மத்திய அமைச்சர் கிஷண் ரெட்டியும் பதவி வகித்து வந்தனர். இவர்களது பதவி காலம் முடிவடைந்ததால், இந்த இரு மாநிலத்திலும் கட்சியை மேலும் பலப்படுத்த புதிய தலைவர்களை பாஜக நியமனம் செய்ய திட்டமிட்டுள்ளது.