
சென்னை: “அஜித்குமாரின் மரணத்துக்கு காரணமாக இருந்தவர்கள் மீது கொலை வழக்கை இப்போது வரையில் ஏன் பதியவில்லை? ஏன் கைது செய்யவில்லை?” என்று பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் சரமாரியாக கேள்வி எழுப்பியுள்ளார்.
இது குறித்து அவர் தனது எக்ஸ்தள பதிவில் வெளியிட்ட பதிவு: “காவல் துறையால் கைது செய்யப்பட்ட அஜித்குமார் 24 மணி நேரத்துக்குள் நீதிபதிக்கு முன் ஏன் ஆஜர்படுத்தப்படவில்லை. பல இடங்களில் அஜித்குமாரை வைத்து அடித்து துன்புறுத்திய காவல்துறை மடப்புரம் கோயில் அலுவலகத்தின் பின்புறம் அழைத்து சென்று தாக்கியுள்ளனர்.