
செய்யூரில் புதிய தீயணைப்பு நிலைய கட்டிடத்துக்கு ரூ.2.10 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ள நிலையில், கட்டுமான பணிகள் தொடங்கப்படாமல் உள்ளதால், விரைவாக பணிகளை தொடங்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என சுற்றுப்புற கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
செங்கல்பட்டு மாவட்டம், செய்யூர் வட்டத்தில் 80-க்கும் மேற்பட்ட கிராமங்கள் மற்றும் பல்வேறு வணிக நிறுவனங்கள், சிப்காட் உள்ளிட்டவை அமைந்துள்ளன. இதனால், மேற்கண்ட வட்டத்தை சேர்ந்த பொதுமக்கள் பல்வேறு தேவைகளுக்காக செங்கல்பட்டு, தாம்பரம், மதுராந்தகம், கல்பாக்கம் ஆகிய பகுதிகளை சார்ந்துள்ளனர்.