• June 30, 2025
  • NewsEditor
  • 0

கொடைக்கானல் கவுஞ்சி பகுதியைச் சேர்ந்த மூர்த்தி தன்னுடைய நிலத்தில் ஆப்பிள், குங்குமபூ போன்றவற்றை நட்டு வைத்து 3 வருட காலம் பராமரித்து தற்போது ஆப்பிள் சாகுபடி செய்வதற்கு தயாராக உள்ளார்.

ஜம்மு காஷ்மீரின் தட்ப வெப்பநிலை இங்கும் இருக்கிறது என்பதை மெய்பிக்கும் விதமாக ஆப்பிள் விளைவித்து காட்டியுள்ளார் மூர்த்தி.

இது குறித்து நாம் பேசியபோது மூர்த்தி கூறுகையில், “2011 லிருந்து ஆப்பிள் விளைவிப்பது பற்றி பயிற்சிகளை எடுத்து 2015-ல் ரெட் டெலிசியஸ், டார்செட் கோல்டன் ரக ஆப்பிள் மரக்கன்றுகளை வாங்கி வந்து என்னுடைய தோட்டத்தில் நட்டு வைத்தேன். முழுக்கவும் இயற்கை முறையில் விவசாயம் செய்து வருகிறேன். 3-வது ஆண்டில் இருந்து மகசூல் கிடைக்கும். நவம்பர், டிசம்பர் மாதத்தில் ஆப்பிள் மரத்தில் கவாத்து பணிகளை மேற்கொள்ள வேண்டும்.

அறுவடைக்கு தயார் நிலையில் உள்ள ஆப்பிள்கள்

பிப்ரவரியில் பூக்கள் பூக்கத் தொடங்கி, ஏப்ரலில் காய்கள் வரத் தொடங்கும். ஜூன் முதல் ஆப்பிள்கள் அறுவடைக்கு தயாராகும். ஆப்பிளின் நிறத்தை வைத்து அதன் இனிப்பு சுவை, அறுவடைக்கு தயாராகி விட்டதா என்பதை அறிய முடியும். ஒரு மரம் 15 அடி வரை வளரும். நன்கு முதிர்ந்த ஒரு மரத்தில் இருந்து குறைந்தது 20 கிலோ, அதிகபட்சமாக 40 கிலோ வரை ஆப்பிள் அறுவடை செய்யலாம். ஆப்பிள் சாகுபடிக்கு ஏற்ற தட்பவெப்ப நிலை கொடைக்கானலில் உள்ளது.

தோட்டக்கலைத் துறை மூலம் தொழில்நுட்ப ஆலோசனை, முறையான பயிற்சி அளித்து, விவசாயிகளை ஊக்குவித்தால் ஆப்பிள் சாகுபடியிலும் வருவாய் ஈட்ட முடியும்” என்றார் மூர்த்தி.

கொடைக்கானலில் ஆப்பிள் விவசாயத்தை ஊக்குவிப்பதற்கு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என திண்டுக்கல் நாடாளுமன்ற உறுப்பினர் சச்சிதானந்தம் தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் பேசும் போது, ” நிறைய விவசாயிகள் இதை விளைவிக்க பயிற்சிகள் எடுத்தனர். காலநிலை மாற்றம் காரணமாக மற்ற விவசாயிகள் இதிலிருந்து வெளியேறினர் மூர்த்தி மட்டும் இதை தொடர்ந்து செய்து தற்போது சாகுபடிக்கு தயாராக உள்ளது. குங்குமபூவும் இவருடைய தோட்டத்தில் விளைவிக்கிறார் மற்ற மாநிலங்களில் விளையும் குங்குமபூவை விட இங்கு பெரிதாகவே வளருகிறது .

விவசாயி மூர்த்தி

தமிழக அரசு ஆப்பிள் சாகுபடியை ஊக்குவிப்பதற்கு தோட்டக்கலை மூலம் முறையான ஆய்வு செய்து ஆப்பிள் விவசாயத்தை கொடைக்கானலில் ஊக்குவிப்பதற்கு முன்வர வேண்டும் இதன் மூலம் நிறைய விவசாயிகள் ஆப்பிள் விளைவிக்க முன்வருவார்கள்” என்றார்.

Read More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *