
சிம்லா: இந்தியா முழுவதும் பருவமழை தீவிரமடைந்துள்ள நிலையில், இமாச்சலப் பிரதேசத்தில் பலத்த மழை பெய்துவருகிறது. இமாச்சலில் கடந்த 24 மணி நேரத்தில் மழை பாதிப்புகளில் சிக்கி 3 பேர் உயிரிழந்தனர். மேலும், பல்வேறு மாவட்டங்களில் பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
சிம்லாவில் பலத்த மழை பெய்து வருவதால் பட்டாகுஃபாரில் உள்ள ஐந்து மாடி கட்டிடம் இன்று (திங்கள்கிழமை) அதிகாலை இடிந்து விழுந்தது. நேற்று இரவு அந்த குடியிருப்பை காலி செய்ததால் மக்கள் யாருக்கும் காயம் ஏற்படவில்லை.