
பெங்களூரு: கர்நாடகாவில் முதல்வர் பதவியில் மாற்றம் ஏற்படக்கூடும் என்ற ஊகங்கள் அதிகரித்து வரும் நிலையில், தனக்கும், துணை முதல்வர் டி.கே. சிவகுமாருக்கும் இடையே ‘வலுவான பிணைப்பு’ இருப்பதாக கர்நாடகா முதல்வர் சித்தராமையா தெரிவித்தார்.
கர்நாடகாவில் முதல்வர் பதவியில் மாற்றம் ஏற்படக்கூடும் என்றும், விரைவில் துணை முதல்வராக உள்ள டி.கே. சிவகுமார் முதல்வராவார் என்றும் தகவல்கள் வெளியாகின. இந்த நிலையில் செய்தியாளர்களிடம் பேசிய சித்தராமையா, “நாங்கள் இருவரும் நல்ல உறவோடு இருக்கிறோம். யார் என்ன சொன்னாலும், எங்களுக்கு இடையேயான பிணைப்பு வலுவாகவே உள்ளது.” என்றார்.