• June 30, 2025
  • NewsEditor
  • 0

திருப்பூர் மாநகரப் பகுதி முழுவதும் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட கஞ்சா மற்றும் புகையிலைப் பொருள்கள் பதுக்கி வைத்திருப்பது குறித்து தனிப்பிரிவு போலீஸார் சோதனை மேற்கொண்டு வருகின்றனர்.

அதன் ஒரு பகுதியாக குப்பாண்டம்பாளையத்தில் வடமாநிலத் தொழிலாளர்கள் தங்கி உள்ள பகுதியில் இன்று காலை சோதனை மேற்கொண்டனர். சோதனையின்போது, 300 கிராம் எடையுள்ள கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது.

தொடர்ந்து, நடைபெற்ற சோதனையில் ஒரு வீட்டில் பையில் மறைத்து வைத்திருந்த துப்பாக்கி இருந்தது தெரியவந்தது. அந்த துப்பாக்கியை கைப்பற்றிய போலீஸார் அது தொடர்பாக விசாரணை மேற்கொண்டனர்.

கைது

போலீசாரின் விசாரணையில், பீகார் மாநிலத்தைச் சேர்ந்த ஜாகிர் அன்வர்(30), ரவிராஜா (25) ஆகியோர் பீகாரிலிருந்து இரண்டு நாட்டு துப்பாக்கிகளை ரூ.6,000-த்துக்கு வாங்கி வந்துள்ளனர். இங்கு அந்த துப்பாக்கியை ரூ.50 ஆயிரம் வரை விலை பேசி விற்பனை செய்வதற்கு தயாராக வைத்திருந்ததாக தெரிவித்தனர்.

இரண்டு துப்பாக்கிகளை கைப்பற்றிய போலீஸார் இருவரையும் கைது செய்தனர். மேலும், இந்த துப்பாக்கியை யாருக்கு விற்பனை செய்ய வைத்திருந்தார்கள் என்பது குறித்த விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். கைத்துப்பாக்கியுடன் பீகாரைச் சேர்ந்த இருவர் கைது செய்யப்பட்ட சம்பவம் திருப்பூரில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Read More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *