
புதுடெல்லி: பண மோசடி வழக்கில் கடந்த மாதம் கைது செய்யப்பட்ட ஹரியானா முன்னாள் காங்கிரஸ் எம்எல்ஏ தரம் சிங் சோக்கருக்கு சொந்தமான ரூ.557 கோடி மதிப்பிலான சொத்துகளை அமலாக்கத் துறை முடக்கியுள்ளது.
இதுகுறித்து அமலாக்கத் துறை கூறியுள்ளதாவது: பணமோசடி வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள ஹரியானா முன்னாள் காங்கிரஸ் எம்எல்ஏ தரம் சிங் சோக்கர் என்பவருக்கு சொந்தமான ரூ.557 கோடி மதிப்பிலான சொத்துகள் முடக்கப்பட்டுள்ளன. இதையடுத்து, இந்த வழக்கில் முடக்கப்பட்டுள்ள ஒட்டு மொத்த சொத்துகளின் மதிப்பு ரூ.638 கோடியாக அதிகரித்துள்ளது.