• June 30, 2025
  • NewsEditor
  • 0

சென்னை: மகளிர் உரிமைத் தொகை பெறு​வதற்​கான விதி​களில் 3 தளர்​வு​களை அளித்து தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்​ளது. கடந்த 2021-ம் ஆண்டு சட்​டப்​பேர​வைத் தேர்​தலின்​போது, பெண்​களுக்கு ரூ.1000 உதவித் தொகை வழங்கப்படும் என திமுக அறி​வித்​தது. பின்​னர், 2023-ம் ஆண்டு ‘கலைஞர் மகளின் உரிமை தொகை திட்​டம்’ என்ற பெயரில் திட்டம் தொடங்​கப்​பட்​டது. இதை பெறு​வதற்​கும் சில நிபந்​தனை​கள் விதிக்​கப்​பட்​டன. அதில், நான்கு சக்கர வாக​னம் (கார், ஜீப் போன்​றவை) வைத்​திருக்​கும் குடும்​பங்​களைச் சேர்ந்த பெண்​கள் திட்​டத்​துக்கு தகு​தி​யற்​றவர்​களாக கருதப்​பட்​டனர்.

அதே​நேரம், அரசின் நிபந்​தனை​களுக்​குட்​பட்டு தகு​தி​யுள்ள பெண்​களின் விண்​ணப்​பங்​கள் நிராகரிக்​கப்​பட்​ட​தாக​வும் புகார்​கள் எழுந்​தன. இதைத் தொடர்ந்து ஜூலை 15-ம் தேதி முதல் நடை​பெறும் ‘உங்​களு​டன் ஸ்டா​லின்’ சிறப்பு முகாம்​களில் கடந்த முறை விண்​ணப்​பித்து நிராகரிக்​கப்​பட்​ட​வர்​கள் மற்​றும் புதி​தாக ரேஷன் அட்டை பெற்​றவர்​கள் அனை​வரும் விண்​ணப்​பிக்​கலாம் என கூறப்​பட்​டது.

Read More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *