
மதுரையை சேர்ந்த ராம் என்கிற ராமச்சந்திரனுக்கு (விக்ரம் பிரபு), முப்பது வயதைத் தாண்டியும் திருமணம் நடக்கவில்லை. ஒரு காலத்தில் அவர் பல பெண்களை நிராகரித்த நிலையில் இப்போது அவரை பலர் நிராகரிக்கின்றனர்.
‘அவன் ராசிக்கு பெண்ணே கிடைக்காது’ என்று சொல்லப்படும் நிலையில் அவருக்கு வேறு ஊரில், வேறு சாதியில் அம்பிகா (சுஷ்மிதா பட்) என்ற பெண்ணை, தரகர் மூலம் பார்க்கிறார்கள். இதற்காக கோபிசெட்டிப்பாளையம் செல்கின்றனர், ராமின் குடும்பத்தினர். இந்த நேரத்தில் கரோனா பொது முடக்கம் அறிவிக்கப்படுகிறது. பெண் வீட்டிலேயே அவர்கள் சில வாரங்கள் தங்கி இருக்க வேண்டிய சூழல். இந்தக் காலக்கட்டத்தில் ராமின் உறவினர்களால் ஏற்படும் குழப்பத்தில் அவர் திருமணத்துக்குச் சிக்கல் ஏற்படுகிறது. அந்த சிக்கல் தீர்ந்ததா? ராமின் திருமணக் கனவு என்னவாகிறது என்பது கதை.