
சென்னை: டிஜிட்டல் பரிவர்த்தனை குறைவாக இருக்கும் டாஸ்மாக் கடை ஊழியர்களுக்கு டாஸ்மாக் மேலாளர்கள் விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பி உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. தமிழகத்தில் 4,829 டாஸ்மாக் மதுபானக் கடைகள் உள்ளன. இந்த கடைகளில் பாட்டிலுக்கு ரூ.10 முதல் ரூ.40 வரை கூடுதல் பணம் வசூல் செய்யப்பட்டு வருவதாக குற்றச்சாட்டு எழுந்தது. இதனை தடுப்பதற்காக டாஸ்மாக் நிர்வாகம் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.
அந்தவகையில் உற்பத்தி முதல் விற்பனை வரை என்ற திட்டத்தை அறிமுகம் செய்தது. அதன்படி விற்பனையை கண்காணிக்க டாஸ்மாக் நிர்வாகம் டிஜிட்டல்மயமாகி உள்ளது. டாஸ்மாக் கடைகளில் விற்கப்படும் ஒவ்வொரு பாட்டிலும், செல்போன் வடிவலான கையடக்க கருவி மூலம் ஸ்கேன் செய்து அதன் பிறகே விற்கப்படுகிறது.