
மடப்புரத்தில் உள்ள கோயில் காவலாளி உயிரிழந்த சம்பவத்துக்கு பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்களும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.
மத்திய இணையமைச்சர் எல்.முருகன்: காவல் துறையை கட்டுப்பாட்டில் வைத்திருக்க வேண்டிய முதல்வர் கண்டும் காணாமல் இருப்பதால் அப்பாவி மக்கள் உயிரிழக்கின்றனர். மடப்புரம் சம்பவத்துக்கு முதல்வர் என்ன சொல்லப் போகிறார்?