
திண்டுக்கல்: சந்தன கடத்தல் வீரப்பனுக்கு தமிழக அரசு மணிமண்டபம் அமைத்து கொடுக்கவேண்டும் என அமைச்சர் ஐ.பெரியசாமியிடம் வீரப்பன் மனைவியும் தவாக அரசியல் குழு உறுப்பினருமான முத்துலட்சுமி கோரிக்கை விடுத்தார்.
திண்டுக்கல் அருகே சின்னாளபட்டியில் தமிழக வாழ்வுரிமைக் கட்சி நிர்வாகி இல்ல விழாவில் பங்கேற்க அக்கட்சியின் அரசியல் தலைமை குழு உறுப்பினர், சந்தன கடத்தல் வீரப்பன் மனைவி முத்துலட்சுமி வருகை தந்தார். அந்த விழாவில் அமைச்சர் ஐ.பெரியசாமியும் கலந்துகொண்டார். அப்போது அவரிடம் முத்துலட்சுமி, தனது கணவர் அடக்கம் செய்யப்பட்ட இடத்தில், தமிழக அரசு மணிமண்டபம் அமைத்துக்கொடுக்க நடவடிக்கை எடுக்கவேண்டும். இதை முதல்வரிடம் வலியுறுத்துங்கள் என கேட்டுக்கொண்டார். உங்களின் கோரிக்கையை முதல்வர் கவனத்திற்கு கொண்டு செல்கிறேன் என அமைச்சர் தெரிவித்தார்.