
இன்று நடைபெற்ற ஆங்கில இலக்கியத்துக்கான தேசிய தகுதித் தேர்வில் சமஸ்கிருதம் பற்றி அதிக கேள்விகள் கேட்கப்பட்டுள்ளதாக குற்றச்சாட்டை எழுப்பியுள்ளார் மதுரை நாடாளுமன்ற உறுப்பினர் சு.வெங்கடேசன்.
இதுகுறித்த அவரது சமூக வலைத்தளப் பதிவில், “மத்திய அரசு நடத்திய ஆங்கில இலக்கியத்திற்கான தேசிய தகுதித் தேர்வில் (UGC NET) (27/6/25), சமஸ்கிருதம் குறித்து பல கேள்விகள் கேட்கப்பட்டுள்ளன.
இது கடுமையான கண்டனத்துக்குரிய நடவடிக்கை. இந்த வினாத்தாளை தயாரித்தவர் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்.” எனக் கூறியுள்ளார் அவர்.
In the National Eligibility Test (UGC NET) for English Literature conducted by the Union Government (27/6/25), several questions were asked about Sanskrit.
This deserves strong condemnation. Appropriate action must be taken against those who prepared these questions.
All… pic.twitter.com/BDjtDKlAM2
— Su Venkatesan MP (@SuVe4Madurai) June 29, 2025
முன்னதாக சமூக வலைதளங்களில் பலரும் ஆங்கில இலக்கியத்துக்கான நெட் தேர்வில், முக்கிய ஆங்கில எழுத்தாளர்களை விட கலாசார விமர்சகர்கள் தொடர்பான கேள்விகளே அதிகம் இருந்ததாகவும், வினாத்தாள் ஆங்கில இலக்கியம் படித்தவர்களுக்காக தயாரிக்கப்பட்டது போலத் தெரியவில்லை என்றும் கருத்து தெரிவித்து வந்தனர்.
சமஸ்கிருதம் பற்றி கேட்கப்பட்ட கேள்விகளுக்கான முழு மதிப்பெண்களையும் தேர்வர்களுக்கு வழங்க வேண்டும் என்றும் சு.வெங்கடேசன் கருத்து தெரிவித்துள்ளார்.
அவரது பதிவுடன், இந்துத்துவ தத்துவங்கள், ரிக் வேதம் பற்றிய கேள்விகளை புகைப்படமாக இணைத்துள்ளார்.