• June 29, 2025
  • NewsEditor
  • 0

நீலகிரி மாவட்டம் குன்னூர் அருகில் உள்ள ஓட்டுப்பட்டறை பகுதியில் இருந்து நோயாளி ஒருவரை நேற்று தனியார் ஆம்புலன்ஸ் மூலம் குன்னூர் அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றிருக்கிறார்கள்.

குன்னூர் நகரின் நுழைவு வாயில் பகுதியில் அமைக்கப்பட்டுள்ள லெவல் கிராஸிங் வேகத்தடை மீது ஆம்புலன்ஸ் ஏறி இறங்கும் போது ஆம்புலன்ஸினுள் பொருத்தப்பட்டிருந்த ஸ்ட்ரெச்சர் திடீரென கழன்று நழுவி பின்பக்க கதவில் பலமாக மோதியிருக்கிறது.‌‌

தனியார் ஆம்புலன்ஸ்

கதவு திறக்கப்பட்டதால் உள்ளே இருந்த நோயாளி ஸ்ட்ரெச்சருடன் நடுரோட்டில் கீழே விழுந்துள்ளார். இதைக் கண்டுப் பதறிய பொதுமக்கள், பின்னால் வந்த வாகனங்கள் அனைத்தையும் உடனடியாக நிறுத்திவிட்டு நோயாளியை பத்திரமாக மீட்டு மீண்டும் ஆம்புலன்ஸில் ஏற்றி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்திருக்கிறார்கள்.

அவசர காலங்களில் உயிர் காக்கும் வாகனமாக செயல்படும் ஆம்புலன்ஸ்களை முறையாக பராமரிக்காத தனியார் ஆம்புலன்ஸ் நிறுவனத்தை மக்கள் கண்டித்து வருகின்றனர்.

ஓடும் ஆம்புலன்ஸில் இருந்து நோயாளி ஒருலர் நடுரோட்டில் கீழே விழும் சி.சி.டி.வி காட்சிகள் இணையத்தில் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.‌‌

தனியார் ஆம்புலன்ஸ்

அவசர தேவைகளுக்காக ஆம்புலன்ஸ்களை தொடர்ந்து அதிக வேகத்தில் இயக்க வேண்டி இருப்பதால் குறிப்பிட்ட கால இடைவெளியில் வட்டாரப் போக்குவரத்து அலுவலர் மூலம் முறையாக ஆய்வு செய்து சான்றிதழ் வழங்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.

Read More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *