
சிவகாசி: 2026 சட்டப்பேரவை தேர்தலை பாமக ஒரே அணியாக எதிர்கொள்ளும், என அக்கட்சியின் பொருளாளர் சையத் மன்சூர் உசேன் தெரிவித்தார்.
சிவகாசியில் பாமக சார்பில் ஒருங்கிணைந்த விருதுநகர் மாவட்ட செயற்குழு கூட்டம் நடைபெற்றது. மத்திய மாவட்ட செயலாளர் டேனியல் தலைமை வகித்தார். நிறுவனர் ராமதாஸால் நியமிக்கப்பட்ட பாமக பொதுச்செயலாளர் முரளி சங்கர், பொருளாளர் சையத் மன்சூர் உசேன், தென் மாவட்ட பொறுப்பாளர் பாஸ்கரன் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டனர்.