• June 29, 2025
  • NewsEditor
  • 0

புரி: புரி ஜெகநாதர் கோயில் ரத யாத்திரையில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 3 பேர் பலியானதை தொடர்ந்து, மாவட்ட ஆட்சியர் மற்றும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பணியிடமாற்றம் செய்யப்பட்டனர்.

புரி ஜெகநாதர் கோயில் ரத யாத்திரை நிகழ்வில் இன்று ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 3 பேர் பலியாகினர். சுமார் 50 பேர் காயமடைந்தனர். இந்த சம்பவம் தொடர்பாக விரிவான விசாரணை நடைபெற்று வரும் நிலையில், புரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் வினித் அகர்வால் மற்றும் மாவட்ட ஆட்சியர் சித்தார்த்த சங்கர் ஸ்வெயின் ஆகியோரை மாநில அரசு பணியிடமாற்றம் செய்துள்ளது. இதனையடுத்து, தற்போது ஏடிஜிபியாக ஆக உள்ள பினாக் மிஸ்ரா, பூரியின் எஸ்.பியாக பதவியேற்கிறார். அதே நேரத்தில் குர்தா கலெக்டர் சஞ்சல் ராணா, புரியின் புதிய மாவட்ட ஆட்சியராக பொறுப்பேற்கவுள்ளார். மேலும், இந்த விவகாரத்தில் டிசிபி பிஷ்ணு பதி மற்றும் கமாண்டன்ட் அஜய் பதி ஆகிய இரண்டு காவல்துறை அதிகாரிகளையும் பணியிடைநீக்கம் செய்ததாக ஒடிசா முதல்வர் அறிவித்துள்ளார்.

Read More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *