• June 29, 2025
  • NewsEditor
  • 0

ஜாம்ஷெட்பூர்: கனமழையால் ஏற்பட்ட திடீர் வெள்ளப்பெருக்கு காரணமாக ஜார்க்கண்ட் மாநிலம் ஜாம்ஷெட்பூரில் உள்ள கோவாலி காவல்நிலைய எல்லைக்கு உட்பட்ட லவ் குஷ் குடியிருப்புப் பள்ளியில் சிக்கித் தவித்த 162 குழந்தைகளை காவல்துறையினர் துரிதமாக செயல்பட்டு மீட்டனர்.

இதுகுறித்து ஜாம்ஷெட்பூர் காவல்துறை வெளியிட்ட எக்ஸ் பதிவில், “கனமழையால் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு காரணமாக கோவாலி காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட லவ் குஷ் குடியிருப்புப் பள்ளியில் சிக்கித் தவித்த 162 குழந்தைகளை ஜாம்ஷெட்பூர் காவல்துறையினர் வெற்றிகரமாக மீட்டு அவர்களது குடும்பத்தினரிடம் ஒப்படைத்தனர்.” என்று தெரிவித்துள்ளது.

Read More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *