• June 29, 2025
  • NewsEditor
  • 0

நிஜமாபாத்: “2026-ம் ஆண்டு மார்ச் 31-க்குள் மாவோயிசம் மற்றும் நக்சல் சித்தாந்தத்திலிருந்து நாட்டை விடுவிப்பதில் மத்திய அரசு உறுதியாக இருக்கிறது” என்று மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா சூளுறைத்தார். மேலும், துப்பாக்கிகளை கைவிட்டு சரணடையுமாறு மாவோயிஸ்டுகளுக்கு அவர் அறிவுறுத்தினார்.

தெலங்கானாவின் நிஜாமாபாத்தில் இன்று (ஜூன் 29) நடந்த பொதுக்கூட்டத்தில் உரையாற்றிய அமித் ஷா, “சரணடைய விரும்புவோர், வடகிழக்கில் ஆயிரக்கணக்கான நக்சல்கள் செய்தது போல் சரணடைந்து பிரதான நீரோட்டத்தில் இணையலாம். ஆனால் துப்பாக்கிகளை எடுப்பவர்கள் தப்பிக்க மாட்டார்கள். கடந்த 18 மாதங்களில் 1,500-க்கும் மேற்பட்ட நக்சல்கள் சரணடைந்துள்ளனர். வடகிழக்கில் 10,000-க்கும் மேற்பட்ட முன்னாள் நக்சல்கள் வன்முறையைக் கைவிட்டு, ஜனநாயக நீரோட்டத்தில் இணைந்துள்ளனர்.” என்றார்.

Read More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *