
‘சித்தாரே ஜமீன் பர்’ படத்தின் தமிழ் பதிப்புக்காக சிவகார்த்திகேயனிடம் மன்னிப்புக் கேட்டு தொலைபேசியில் பேசியிருக்கிறார் ஆமிர்கான்.
ஆர்.எஸ்.பிரசன்னா இயக்கத்தில் ஆமிர்கான், ஜெனிலியா உள்ளிட்ட பலர் நடிப்பில் வெளியாகியுள்ள படம் ‘சித்தாரே ஜமீன் பர்’. இந்தியில் வெளியான இப்படம் விமர்சன ரீதியாக பெரும் வரவேற்பைப் பெற்றது.