
‘சூர்யா 46’ படத்தின் கதைக்களம் குறித்து இயக்குநர் வெங்கி அட்லுரி வெளிப்படையாக தெரிவித்துள்ளார்.
‘கருப்பு’ படத்தின் பணிகளை முடித்துவிட்டு, வெங்கி அட்லுரி இயக்கத்தில் உருவாகும் படத்தில் கவனம் செலுத்தி வருகிறார் சூர்யா. இதன் முதற்கட்ட படப்பிடிப்பு ஹைதராபாத்தில் முடிவுற்றது. தற்போது சூர்யா – ஜோதிகா இருவரும் சுற்றுலா சென்றிருக்கிறார்கள். அவர்கள் திரும்பியவுடன் மீண்டும் அடுத்தகட்ட படப்பிடிப்பு தொடங்கவுள்ளது.