
புதுடெல்லி: பாகிஸ்தானில் நடந்த தற்கொலைப் படைத் தாக்குதலுக்கு இந்தியா மீது குற்றம் சாட்டப்பட்டதற்கு, மத்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் கண்டனம் தெரிவித்துள்ளது. மேலும், அந்தக் குற்றச்சாட்டை திட்டவட்டமாக மறுத்துள்ளது.
மத்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் இதுதொடர்பாக வெளியிட்டுள்ள அறிக்கையில், “பாகிஸ்தான் ராணுவத்தின் அதிகாரபூர்வமான அறிக்கையை பார்த்தோம். அதில் ஜூன்28-ல் நடந்த வஜீரிஸ்தான் தாக்குதலுக்கு இந்தியாவை குற்றம்சாட்டி உள்ளது. இந்தியா இந்தக் குற்றச்சாட்டை முற்றிலும் நிராகரிக்கிறது. அதோடு கண்டனமும் தெரிவிக்கிறது” எனக் கூறப்பட்டுள்ளது.