
புதுடெல்லி: உலக சுகாதார நிறுவனம் இந்தியாவை கண் நோயான டிராக்கோமா இல்லாத நாடாக அறிவித்துள்ளது என்று ‘மன் கி பாத்’ உரையில் பிரதமர் மோடி தெரிவித்தார்.
மாதம்தோறும் பிரதமர் நரேந்திர மோடி ‘மன் கி பாத்’ நிகழ்ச்சி மூலம் மக்களுடன் வானொலி வழியாக உரையாடி வருகிறார். இன்று இந்த நிகழ்ச்சியின் 123-வது அத்தியாயத்தில் உரையாற்றிய பிரதமர் மோடி, “உலக சுகாதார நிறுவனம் இந்தியாவை கண் நோயான டிராக்கோமா இல்லாத நாடாக அறிவித்துள்ளது என்பதை உங்களுடன் பகிர்ந்து கொள்வதில் மகிழ்ச்சி அடைகிறேன். இது நமது சுகாதார ஊழியர்களின் வெற்றி. 'ஜல் ஜீவன்' மிஷன் இதற்கு பங்களித்துள்ளது.