
எம்ஜிஆருக்கு தனிச்செயலராக 1972 முதல் 1987 வரை இருந்த மகாலிங்கம் (73) காலமானார். இவர் சென்னை ராஜா அண்ணாமலைபுரத்தில் வசித்து வந்தார். உடல்நலக் குறைவு காரணமாக ப தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார்.
இந்நிலையில் நேற்று முன்தினம் இரவு காலமானார். அவரது உடல், பெசன்ட்நகர் மின் மயானத்தில் நேற்று மாலை தகனம் செய்யப்பட்டது. இவருக்கு சுமதி என்ற மனைவியும், தமிழ்ச்செல்வன், புவனேஷ் என்ற மகன்களும், சத்யா என்ற மகளும் உள்ளனர்.