
செல்போன் மூலம் அவசரகால எச்சரிக்கை விடுக்கும் நடைமுறையை நாடு முழுவதும் தொலை தொடர்புத்துறை நேற்று பரிசோதித்தது.
ஆன்ட்ராய்ட் செல்போன் மற்றும் ஐ-போன்களில் செல் ஒலிபரப்பு மூலம் பொதுமக்களுக்கு அவசரகால எச்சரிக்கை தகவலை அனுப்பும் பரிசோதனையை தொலை தொடர்புத்துறை நாடுமுழுவதும் நேற்று மேற்கொண்டது. இது பொதுமக்கள் பாதுகாப்பு மற்றும் பேரிடர் மேலாண்மையில் முக்கிய பங்காற்றுகிறது.