
பெங்களூரு: கர்நாடக மாநிலம் மைசூருவை அடுத்துள்ள மலே மாதேஸ்வரா வனவிலங்கு சரணாலயத்துக்கு உட்பட்ட கஜனூர் வனப்ப‌குதியில் 2 தினங்களுக்கு முன்பு ஒரு தாய் புலியும் அதன் 4 குட்டிகளும் இறந்து கிடந்தன.
அவற்றின் பக்கத்தில் இறந்த பசுவின் சிதைந்த உடலும் கிடந்தது. இதுகுறித்து வனத்துறை அதிகாரிகள் விசாரித்த போது, அந்த பசு, கோப்பு கிராமத்தை சேர்ந்த கோனப்பாவுக்கு சொந்தமானது என தெரிய வந்தது.