
புதுடெல்லி: உத்தர பிரதேச மாநிலத்தில் 15 ஆண்டுகளாக கதாகாலட்சேபம் செய்யும் முகுட்மணி சிங் யாதவ் மற்றும் அவரது உதவியாளர் சந்த் குமார் யாதவ் தாக்கப்பட்டனர். முகுட்மணியின் தலைமுடியை மொட்டையடித்த கும்பலில் 4 இளைஞர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
பிராமணர் அல்லாத முகுட்மணி கதாகாலட்சேபம் செய்யக் கூடாது என்று எதிர்ப்பு தெரிவித்து தாக்குதல் நடந்துள்ளது. இதை சமாஜ்வாதி தலைவர் அகிலேஷ் யாதவ் உட்பட பலரும் கண்டித்துள்ளனர். இதற்கிடையில், முகுட்மணி மீது பாலியல் மற்றும் பிராமணர் என பொய் கூறியதாக வழக்குகள் பதிவு செய்யப்பட்டன. இதுகுறித்து உ.பி.யின் மற்றொரு பிரபல கதாகாலட்சேபகர் லவ்லி சாஸ்திரி வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது: முகுட்மணி மீது நடத்தப்பட்ட தாக்குதல் யாதவ சமூகத்தினர் அனைவருக்கும் அவமானம். யாதவர்களில் கதாகாலட்சேபகர்கள் அதிகமாகிவிட்டதால், பிராமணர்களுக்கு கோபம் வருகிறது. யாதவர்களால் வாழ்நாள் முழுவதும் வணங்கப்பட்டவர்கள் இப்போது அவர்களைத் தாக்குகிறார்கள்.