• June 29, 2025
  • NewsEditor
  • 0

புதுடெல்லி: உத்தர பிரதேச மாநிலத்​தில் 15 ஆண்​டு​களாக கதாகாலட்​சேபம் செய்​யும் முகுட்​மணி சிங் யாதவ் மற்​றும் அவரது உதவி​யாளர் சந்த் குமார் யாதவ் தாக்​கப்​பட்​டனர். முகுட்​மணி​யின் தலை​முடியை மொட்​டையடித்த கும்​பலில் 4 இளைஞர்​கள் கைது செய்​யப்​பட்​டுள்​ளனர்.

பிராமணர் அல்​லாத முகுட்​மணி கதாகாலட்​சேபம் செய்யக் கூடாது என்று எதிர்ப்பு தெரி​வித்து தாக்​குதல் நடந்​துள்​ளது. இதை சமாஜ்​வாதி தலை​வர் அகிலேஷ் யாதவ் உட்பட பலரும் கண்​டித்​துள்​ளனர். இதற்​கிடை​யில், முகுட்​மணி மீது பாலியல் மற்​றும் பிராமணர் என பொய் கூறிய​தாக வழக்​கு​கள் பதிவு செய்​யப்​பட்​டன. இதுகுறித்து உ.பி.​யின் மற்​றொரு பிரபல கதாகாலட்​சேபகர் லவ்லி சாஸ்​திரி வெளி​யிட்ட அறிக்​கை​யில் கூறி​யிருப்​ப​தாவது: முகுட்​மணி மீது நடத்​தப்​பட்ட தாக்​குதல் யாதவ சமூகத்​தினர் அனை​வருக்​கும் அவமானம். யாதவர்​களில் கதாகாலட்​சேபகர்​கள் அதி​க​மாகி​விட்​ட​தால், பிராமணர்​களுக்கு கோபம் வரு​கிறது. யாதவர்​களால் வாழ்​நாள் முழு​வதும் வணங்​கப்​பட்​ட​வர்​கள் இப்​போது அவர்​களைத் தாக்​கு​கிறார்​கள்.

Read More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *