
மதிமுகவில் இருந்து விலகி திமுகவில் நிர்வாகிகள் இணைந்த பரபரப்பான சூழலில், மதிமுக நிர்வாகக் குழு கூட்டம் இன்று கூடவுள்ளது.
வரும் சட்டப்பேரவைத் தேர்தலையொட்டி, அனைத்து கட்சிகளும் களப்பணிகளை தீவிரப்படுத்தியுள்ளன. திமுக கூட்டணியில் உள்ள கட்சிகளும் தொகுதி பேரத்தை தொடங்கி, அரசியல் களம் சூடுபிடித்துள்ளது. இதற்கிடையே, பொதுச்செயலாளர் வைகோவுக்கு மீண்டும் மாநிலங்களவை இடம் தராததால் திமுக மீது அதிருப்தியில் உள்ள மதிமுக நிர்வாகிகள், வரும் தேர்தலில் கூடுதல் தொகுதிகளை திமுகவிடம் கேட்கும்படி தலைமையை வலியுறுத்த திட்டமிட்டிருந்தனர்.