• June 29, 2025
  • NewsEditor
  • 0

சேலம்: அகில இந்​திய அளவில் காங்​கிரஸ் கட்சி வலு​விழந்து வரு​கிறது என்று தமாகா தலை​வர் ஜிகே.​வாசன் கூறி​னார். சேலத்​தில் செய்​தி​யாளர்​களிடம் அவர் நேற்று கூறிய​தாவது: தேசிய ஜனநாயக கூட்​ட​ணி​யில் எந்த குழப்​ப​மும் கிடை​யாது. ஆனால், திமுக​வினர் தாறு​மாறாக பேசி, தேவையற்ற குழப்​பத்தை ஏற்​படுத்​துகிறார்​கள். கூட்​ட​ணி​யின் நிலையை அமித்ஷா ஏற்​கெனவே தெளிவுபடுத்​தி​விட்​டார். தேஜகூ ஆட்​சிக்கு வந்​தால் யார் முதல்​வர் என்​பது அனை​வருக்​கும் தெரி​யும். எங்​கள் நோக்​கம் மக்​கள் விரோத திமுகவை அகற்​று​வது​தான்.

தமிழகத்​தில் சட்​டம்​-ஒழுங்கு சீரழிந்​து​விட்​டது. போதைப் பொருட்​கள் புழக்​கத்தை அரசால் கட்​டுப்​படுத்த முடிய​வில்​லை. தமிழகத்தில் பல்​வேறு வரி, கட்​டணங்​கள் உயர்த்​தப்​பட்​டு, மக்​கள் பெரிதும் பாதிக்​கப்​பட்​டுள்​ளனர். அகில இந்​திய அளவில் காங்​கிரஸ் கட்சி பலத்தை இழந்து கொண்​டிருக்​கிறது. இவ்​வாறு அவர்​ கூறி​னார்​.

Read More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *