• June 29, 2025
  • NewsEditor
  • 0

புதிய இருசக்கர வாகனம் வாங்குவோருக்கு, வாகன உற்பத்தியாளர்கள் இரண்டு ஹெல்மெட்களை வழங்குவதை கட்டாயமாக்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. அதுபோல ஆன்டி-லாக் பிரேக்கிங் சிஸ்டத்தை கட்டாயமாக்கவும் முடிவு செய்துள்ளது.

இந்த புதிய விதிகளை நடைமுறைப்படுத்த மத்திய மோட்டார் வாகன விதிகள், 1989-ல் திருத்தம் செய்ய மத்திய சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலை அமைச்சகம் பரிந்துரை செய்துள்ளது. இது தொடர்பாக மத்திய அரசு வெளியிட்ட அறிக்கையில் மேலும் கூறியிருப்பதாவது: புதிய திருத்தங்கள் அதிகாரப்பூர்வ அரசிதழில் வெளியிடப்பட்ட 3 மாதங்களில் இந்த விதிகள் நடைமுறைக்கு வரும். வாகன ஓட்டுநர் மற்றும் பின்னால் அமர்ந்து பயணிப்பவரின் பாதுகாப்பை உறுதிசெய்வதே இதன் நோக்கம்.

Read More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *