
சென்னை: தனது வாழ்நாளில் 80 ஆண்டுகளை பொது வாழ்க்கைக்கு ஒப்படைத்த மாபெரும் தலைவர் முன்னாள் முதல்வர் கருணாநிதி என்று முதல்வர் ஸ்டாலின் புகழாரம் சூட்டினார்.
சாகித்ய அகாடமி, டெல்லி ஜவஹர்லால் பல்கலைக்கழகம் சார்பில் கருணாநிதி நூற்றாண்டு கருத்தரங்கம் சென்னை கலைவாணர் அரங்கில் நேற்று நடைபெற்றது. முதல்வர் மு.க.ஸ்டாலின் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டு, கருத்தரங்கை தொடங்கி வைத்தார்.