
சென்னை: காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் மெட்ரிக்குலேஷன் பள்ளி மற்றும் சூளைமேடு, அஞ்சுகம் தொடக்கப் பள்ளியில் ரூ.13.94 கோடி செலவில் கட்டப்பட்டுள்ள பள்ளி கூடுதல் கட்டிடங்களை திறந்து வைத்த முதல்வர் மு.க.ஸ்டாலின் மாணவ, மாணவியர்களுக்கு கல்வி உதவித்தொகை உள்ளிட்டவற்றையும் வழங்கினார்.
இதுகுறித்து தமிழக அரசு வெளியிட்ட செய்திக்குறிப்பு: இந்து சமய அறநிலையத் துறையின், கோயில்கள் சார்பில் நடத்தப்படும் 25 பள்ளிகள் மற்றும் ஒரு பாலிடெக்னிக் கல்லூரி உட்பட 10 கல்லூரிகளில் 22,455 மாணவ, மாணவியர் கல்வி பயின்று வருகின்றனர். கடந்த 4 ஆண்டுகளில் இப்பள்ளிகள் மற்றும் கல்லூரிகளுக்கு ரூ.138.13 கோடியில் பல்வேறு உட்கட்டமைப்பு வசதிகள் செய்து தரப்பட்டுள்ளன.