
கவுகாத்தி: அரசியலமைப்பின் முகவுரையில் இருந்து 'மதச்சார்பின்மை' மற்றும் 'சோசலிசம்' ஆகிய வார்த்தைகளை நீக்க வேண்டும் என அசாம் முதல்வர் ஹிமந்த பிஸ்வா சர்மா வலியுறுத்தியுள்ளார்.
கவுகாத்தியில் உள்ள மாநில பாஜக தலைமையகத்தில் 'தி எமர்ஜென்சி டைரீஸ்: இயர்ஸ் தட் ஃபோர்ஜ் எ லீடர்' என்ற புத்தக வெளியீட்டு விழாவில் அசாம் முதல்வர் ஹிமந்த பிஸ்வா சர்மா கலந்துகொண்டார். தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய ஹிமந்த பிஸ்வா சர்மா, “இன்று, அவசர நிலையின்போது ஏற்பட்ட போராட்டம் மற்றும் எதிர்ப்பு பற்றிப் பேசும் ‘தி எமர்ஜென்சி டைரி’ என்ற புத்தகத்தை வெளியிட்டோம். அவசர நிலை பற்றிப் பேசும்போது, அதன் மீதமுள்ள விளைவுகளை நீக்க இதுவே சரியான தருணம்.