
சென்னை: “விசிகவுக்கும், காங்கிரஸுக்கும் ராமதாஸ் மீது ஏற்பட்டுள்ள திடீர் பாசம் என்பது திமுகவின் சூழ்ச்சி. ராமதாஸை சுற்றி 3 தீய சக்திகள் உள்ளன. ராமதாஸ் சொல்வது அனைத்தும் பொய். ராமதாஸ் சொல்லிதான் பாஜகவுடன் கூட்டணி பேசினேன்” என்று பாமக தலைவர் அன்புமணி ஆவேசமாக கூறியுள்ளார்.
பாமக தலைவர் அன்புமணி தலைமையில் கட்சியின் பாட்டாளி சமூக ஊடக பேரவை கூட்டம் இன்று (ஜூன் 28) சென்னை சோழிங்கநல்லூரில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் நடந்தது. இந்தக் கூட்டத்தில் அன்புமணி பேசியது: “திமுக தான் பாமகவுக்கு எதிரி. திமுகவுக்கு எதிராக பிரச்சாரம் செய்ய வேண்டும். விசிகவுக்கும், காங்கிரஸுக்கும் ராமதாஸ் மீது திடீர் பாசம் ஏன் வந்தது? ராமதாஸ் மீது திருமாவளவனுக்கு ஏன் திடீர் அன்பு?