• June 28, 2025
  • NewsEditor
  • 0

மெரினா பீச் விரைவில் ‘ப்ளூ பிளாக்’ (Blue Flag) அங்கீகாரம் பெறப்போகிறது

ப்ளூ பிளாக் சான்றிதழ் என்றால் சுத்தமான, பாதுகாப்பான, சுற்றுப்புற சூழலுக்கு ஏற்ற கடற்கரை என்பதற்கான அடையாளம் ஆகும்.

ஆக, மெரினா பீச்சை இந்தத் திட்டத்தின் கீழ் கொண்டுவர, நிழற்குடைகள், மூங்கிலால் ஆன நுழைவு வளவுகள், சிமெண்ட் பாதைகள், மரப்பலகைகள், திறந்தவெளி ஜிம், குழந்தைகளுக்கான விளையாட்டு பகுதி, குளிக்கும் அறை, சுற்றுச்சூழலுக்கேற்ற கழிவறை போன்ற வசதிகள் வரப் போகிறது.

உதயநிதி ஸ்டாலின்

இதற்காக மெரினா பீச்சை சுற்றுச்சூழல் செயலாளர் சுப்ரியா சாகு ஆய்வு செய்திருக்கிறார். மேலும், இந்தத் திட்டத்திற்காக ஏற்பாடு செய்யப்பட்ட 50 ஏக்கர் பகுதியை அடுத்த வாரம் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் திறந்து வைக்கலாம் என்று கூறப்படுகிறது.

ஆனால், இந்தத் திட்டத்திற்கு மெரினாவில் கடை வைத்திருப்பவர்களிடம் எதிர்ப்பு கிளம்பியுள்ளது. கோவா போன்ற ஊர்களுக்கு இது சரிப்பட்டு வரும்.

ஆனால், பலத்த காற்று அடிக்கும் மெரினா கடற்கரையில் மரத்திலான கடைகள் என்பது சரிபட்டு வராது என்று குரல் எழுப்புகின்றனர்.

மேலும், இந்த ஏற்பாடுகளுக்கு மிகுந்த பராமரிப்பு தேவை என்று கூறுகின்றனர்.

கோவலத்திற்கு பிறகு, தமிழ்நாட்டில் ப்ளூ பிளாக் அங்கீகாரம் பெறும் இன்னொரு கடற்கரை மெரினா ஆகும்.

Read More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *