• June 28, 2025
  • NewsEditor
  • 0

திருப்​பூர் ஆயத்த ஆடை நிறு​வனம் ஒன்​றின் இடைநிலைத் தொழிலாளி சாந்​தகு​மார். பணி​யிடத்​தில் மேலா​ள​ரால் ஏற்​படும் அவமானம், மனை​வி​யின் வசை, வீட்டு உரிமை​யாளர் போலீ​ஸில் கொடுக்​கும் புகார் உள்பட பல அழுத்​தங்​கள் அவரைத் தாக்​கு​கின்​றன. அவற்​றி​லிருந்து தப்​பிக்க, மதுவை நாடும் அவர், நிலை​கொள்​ளாத போதை​யில் செய்​யும் செயல்​கள், அவரின் அன்​றைய இரவில் பல எதிர் விளைவு​களைக் கொண்டு வரு​கின்​றன. அந்த இரவு முடி​யும்​போது அவர் என்​ன​வாகிறார் என்​பது கதை.

கதை என்​பதை விட, ஒரு சாமானியனின் போதை இரவில் அவன் சந்​திக்​கும் மனிதர்​கள், நிகழ்​வு​கள் வழி​யாக அவனது குண​மும் வாழ்க்​கை​யும் சுயசரிதை​போல் விரித்​துக் காட்​டப்​படு​வது​தான் படம். கதை சொல்​லலில், நம்​பக​மான காட்​சிகளு​டன் கூடிய தேர்ச்​சிமிக்க திரைக்​கதை உத்​தி​களும், ஒளிப்​ப​தி​வில் இரவில் விழித்​திருக்​கும் திருப்​பூர் நகரத்​தின் உள்​ளோடிய முக​மும், இசை​யில் தன்னிலை உணரும் ஒரு​வனின் விடு​தலைக்​கான ஏக்​க​மும் இயல்​பாக இருப்​ப​தால், ஒரு யதார்த்த சினி​மா​வாக இப்​படம் உயர்ந்​து​விடு​கிறது.

Read More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *