• June 28, 2025
  • NewsEditor
  • 0

பெங்களூரு: கர்நாடக அணைகள் முழு கொள்ளளவை எட்டியதால் தமிழகத்துக்கு வினாடிக்கு 82,000 கன அடி நீர் திறக்கப்பட்டுள்ளது. கர்நாடகாவில் காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளான தலக்காவிரி, பாகமண்டலா, மடிகேரி, மைசூரு உள்ளிட்ட இடங்களில் கடந்த ஒரு வாரமாக கனமழை பெய்து வருகிறது.

இதனால் காவிரி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதால் ஹாரங்கி, ஹேமாவதி ஆகிய அணைகளுக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது. மண்டியா மாவட்டத்தில் உள்ள கிருஷ்ணராஜ சாகர் அணைக்கு நேற்று மாலை 7 மணி நிலவரப்படி வினாடிக்கு 52,415 கன அடி நீர் வந்து கொண்டிருக்கும் நிலையில், 51,115 கன அடி நீர் திறந்து விடப்பட்டுள்ளது.

Read More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *