
சென்னை: நிதித் துறை செயலர் உதயச்சந்திரனுக்கு இதயத்தில் அடைப்பு ஏற்பட்டதால், அறுவை சிகிச்சை செய்து ‘ஸ்டென்ட்’ பொருத்தப்பட்டது.
தமிழக நிதித் துறை செயலர் உதயச்சந்திரனுக்கு லேசான நெஞ்சுவலி இருந்ததால், சென்னை அப்போலோ மருத்துவமனையில் கடந்த வாரம் ஆஞ்சியோ பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. இதில், அவருக்கு இதயத்தில் அடைப்பு இருப்பது தெரியவந்தது.