
புதுடெல்லி: பாகிஸ்தானுக்கு ஒரு தகவலை அளித்தால் ரூ.50,000 கிடைக்கும் என்று கைதான கடற்படை ஊழியர் விஷால் யாதவ் வாக்குமூலம் அளித்துள்ளார்.
ஹரியானாவின் ரேவரியை சேர்ந்த விஷால் யாதவ், டெல்லியில் உள்ள கடற்படை தலைமை அலுவலகத்தில் எழுத்தராக பணியாற்றி வந்தார். இவர் பாகிஸ்தானின் ஐஎஸ்ஐ உளவு அமைப்புக்கு கடற்படையின் ரகசிய தகவல்களை வழங்கி வந்துள்ளார். அண்மையில் அவர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். அவரிடம் தீவிர விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.