• June 28, 2025
  • NewsEditor
  • 0

புதுடெல்லி: வங்கதேசத்துடன் செய்து கொண்ட கங்கை நீர் பகிர்வு ஒப்பந்தத்தை மாற்றியமைப்பது குறித்து மத்திய அரசு பரிசீலனை செய்து வருகிறது. சிந்து நிதி நீரை பகிர்ந்து கொள்ள இந்தியா – பாகிஸ்தான் இடையே ஒப்பந்தம் செய்யப்பட்டிருந்தது. பஹல்காம் தீவிரவாத தாக்குதலுக்கு பதிலடியாக அந்த ஒப்பந்தத்தை நிறுத்துவதாக மத்திய அரசு அறிவித்தது. இதனால் பாகிஸ்தானில் வறட்சி ஏற்படும்.

வங்கதேசத்தில் முகமது யூனுஸ் தலைமையிலான இடைக்கால அரசு இந்தியாவுக்கு எதிரான நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகிறது. வங்கதேசத்துடன் இந்தியா கடந்த 1996-ம் ஆண்டு கங்கை நதி நீர் பகிர்வு ஒப்பந்தம் செய்தது. கொல்கத்தா துறைமுகத்தில் போக்குவரத்து வசதிக்காக, ஃபராக்கா என்ற இடத்தில் தடுப்பனை அமைத்து கங்கை நதி நீர் ஹூக்ளி ஆற்றுக்கு கடந்த 1975-ம் ஆண்டு திருப்பிவிடப்பட்டது. இதனால் வங்கதேசத்தில் வறட்சி ஏற்பட்டது.

Read More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *