
சென்னை: விரைவு ரயில் கட்டணத்தை உயர்த்தும் திட்டம் பரிசீலனையில் உள்ளது. பிரதமரும், ரயில்வே அமைச்சரும் இதுகுறித்து முடிவு செய்து ஜூலை 1-ம் தேதி அறிவிப்பார்கள். கட்டண உயர்வை எதிர்க்கும் முதல்வர் ஸ்டாலின் உள்ளிட்டோர் கள உண்மையை உணர வேண்டும் என்று ரயில்வே இணை அமைச்சர் சோமண்ணா தெரிவித்துள்ளார்.
சென்னை ஐசிஎப் ஆலையில் வந்தே பாரத் ரயில் (ஸ்லீப்பர் வகை), அம்ரித் பாரத் ரயில், ஹைட்ரஜன் ரயில் உள்ளிட்ட ரயில்களின் தயாரிப்பு பணிகள் நடந்து வருகின்றன. இந்த பணிகளை மத்திய ரயில்வே இணை அமைச்சர் சோமண்ணா நேற்று பார்வையிட்டு ஆய்வு செய்தார்.