• June 27, 2025
  • NewsEditor
  • 0

ஆன்மிக குரு, யோகா நிபுணர் மற்றும் எழுத்தாளர் என்று பன்முகம் கொண்ட குரு மித்ரேஷிவா எழுதியுள்ள பணவாசம், கருவிலிருந்து குருவரை, உனக்குள் ஒரு ரகசியம் ஆகிய நூல் வெளியீட்டு விழா சென்னை சர்.பிட்டி தியாகராஜர் அரங்கில் நடைபெற்றது.

நூல் வெளியீட்டு விழா

“கஷ்டப்பட்டு செய்யும் வேலை நல்லா வராது”

இதில் பேசிய இயக்குநர் லிங்குசாமி, “இங்க நான் சுதர்மம்னு ஒரு புதிய வார்த்தையைக் கேட்டேன். விகடன் ஏதோவொன்று புதிதாக இல்லாமல் புத்தகம் வெளியிட மாட்டார்கள். 

சினிமாக்கு வந்த எல்லாரும் நிறைய கஷ்டங்களைக் கடந்திருப்போம். ஆனால் அதெல்லாம் ஒரு கஷ்டமாவே தெரியாது. வருங்காலத்தில் பேட்டி கொடுக்க கன்டென்ட் ரெடி ஆவதாக தோன்றும். 

ஆனந்தம் படம் எடுக்கும்போது முழுக்க முழுக்க படத்துக்குள்ளேயே இருந்து வேலை செய்வோம். காலையில ஏதாவது அசிஸ்டன்ட் வந்து சார் 11 மணி ஆகிடுச்சி, சாப்பிடலாம்னு சொல்லும்போதுதான் நேரமும் பசியும் தெரியும். எல்லாத்தையும் மறந்து தூக்கத்தையும் நம்ம பலவீனத்தையும் மறந்து பேரார்வத்துடன் ஓடுவோம்.

லிங்குசாமி

நான் கஷ்டப்பட்டு எடுத்த எந்த படமும் சரியாக வந்ததில்லை. எடிட் பண்ணும்போது தூக்கம் வரும். இந்த ஃபுட்டேஜ் எல்லாம் சுனாமில அடிச்சுட்டு போயிடக் கூடாதா என நெனச்சிருக்கேன். அதனால நாம ரசிச்சு பண்றது மட்டும்தான் எப்போதுமே சரியா வரும். ” என்றார்.

இதயத்தில் ஒளி இருக்கிறது

மேலும் அவர், “எனக்கு இந்த வாழ்க்கையில் நல்ல சிஸ்டம் அமைந்திருக்கு, பார்த்தசாரதி ராஜகோபாலாச்சாரிதான் என் குரு, அவருக்கு முன்னாடி பாபுஜி, லாலாஜி என அற்புதமான குருக்கள். இப்போது கமலேஷ் படேல், நாங்கள் தாஜி எனக் கூப்பிடுவோம். 

தாஜி சொன்னாங்க, “தப்பான விஷயங்களைச் செய்றவங்க ஒன்னா இருக்காங்க. நல்லதை மக்களிடம் சொல்ல நினைக்கிற நாம் தனித்தனியாக பிரிந்திருக்கிறோம்.” அப்படின்னு. வெவ்வேறு மெத்தேடில் ஒரே விஷயத்தைச் சொல்கிறவர்கள் ஏன் தனித்தனியாக இருக்க வேண்டுமென்று எல்லோரையும் ஹைத்ராபாத்தில் ஒரு நிகழ்ச்சியில் கனக்ட் செய்தார் எங்கள் மாஸ்டர். 

குரு மித்ரேஷிவா
குரு மித்ரேஷிவா

எங்கள் சிஸ்டத்தில், இதயத்தில் தெய்வீக ஒளி இருக்கிறது என்ற நம்பிக்கையுடன் செய்வதுதான் மெடிடேஷன். 

நான் 99ல் சென்னைக்கு வந்தேன். படம் பண்ற முன்னாடி சுதந்திரமா சென்னையில் சுத்திட்டு இருந்தபோது நாம் எதைத் தேடி வந்தோமோ அதை விட்டுட்டு எதையெதையோ நோக்கி அலைவோம். அப்படி திரிந்ததில் ஒரு நெருக்கடி ஏற்பட்டு விவேகானந்தா ஆஸ்ரமத்தில் போய் கண்ணை மூடி அமர்ந்தேன். வரும்போது தியானம் செய்வது எப்படி என்ற புத்தகத்தை வாங்கி வந்தேன். 

பின்னர் தியானம் செய்ய ஒரு குரு இருந்தால் நல்லா இருக்குமே எனத் தோன்றியபோது, சங்கர் சார் அசிஸ்டன்டாக இருந்த வசந்த பாலன் பாபுஜி ஆஸ்ரமத்துக்கு அழைத்து வந்தார். அப்போது என் சுதர்மம் சொன்னது, இதுதான் எனக்கான இடம் என்று. அதற்கு பிறகு நான் திரும்பியேப் பார்க்கவில்லை.” என்றார்.

Guru Mithreshiva நிகழ்ச்சி

விகடன் பிரசுரம் வெளீயீடுகளான இந்தப் புத்தகங்களைப் பொருளாதார நிபுணர் நாகப்பன் , எழுத்தாளர் பட்டுக்கோட்டை பிரபாகர், இயக்குநர் லிங்குசாமி ஆகியோர் வெளியிட சி.கே .குமரவேல், ஜோதிடர் கே.பி . வித்யாதரன் மற்றும் பட்டிமன்ற பேச்சாளர் பாரதி பாஸ்கர் ஆகியோர் பெற்றுகொள்கிறார்கள். இந்த நிகழ்ச்சியைக் காண கீழே உள்ள லிங்கை க்ளிக் செய்யவும்.

Read More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *