
சென்னை: அமித் ஷாவை அவதூறாகப் பேசிய ஆ.ராசா மீது நடவடிக்கை எடுக்காமல் முதல்வர் ஸ்டாலின் மவுனம் காப்பது ஏன்? என தமிழக பாஜக கேள்வி எழுப்பி உள்ளது.
இதுகுறித்து பாஜக மாநில செய்தித் தொடர்பாளர் ஏ.என்.எஸ்.பிரசாத் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: திமுக ஆட்சியின் அதிகார மமதையில், இந்து கடவுள்களையும், இந்து மதத்தையும் திமுக துணை பொதுச்செயலாளர் ஆ.ராசா கொச்சையாகப் பேசி வருகிறார். சமீபத்தில் திமுக நிர்வாகிகள் கூட்டத்தில், திமுகவினர் திருநீறு உள்பட இந்துமத அடையாளங்களுடன் நடமாடக் கூடாது என்று மத நல்லிணக்கத்தை குலைக்கும் வகையில் பேசியிருந்தார்.