• June 27, 2025
  • NewsEditor
  • 0

புதுடெல்லி: ஸ்ரீநகர் மருத்துவருக்கு கோவை தனியார் மருத்துவமனையில் மதச் சுதந்திர உரிமையை மீறும் வகையிலான நிபந்தனையுடன் பட்டமேற்படிப்பின் பட்டயக் கல்வி அனுமதி மறுக்கப்பட்டதாக புகார் எழுந்துள்ளது. இதில் தலையிட்டு நடவடிக்கை எடுக்கக் கோரி தமிழக முதல்வர் ஸ்டாலினுக்கு, காஷ்மீர் மாணவர்கள் சங்கம் கடிதம் எழுதியுள்ளது.

இது குறித்து, தமிழக முதல்வர் ஸ்டாலினுக்கு காஷ்மீர் மாணவர்கள் சங்கம் சார்பில் அதன் தேசிய ஒருங்கிணைப்பாளர் நசீர் குவேஹாமி எழுதியக் கடிதத்தில் கூறியிருப்பதாவது: ‘தேசிய மருத்துவ அறிவியல் தேர்வு வாரியம் (என்பிஎம்எஸ்) நடத்திய நீட் எஸ்எஸ் இரண்டாவது சுற்று கவுன்சிலிங்கில், டாக்டர் சுபைர் அகமதுவுக்கு கோவை மருத்துவ மையம் மற்றும் மருத்துவமனையில் (கேஎம்சிஎச்), நெப்ராலஜி துறையில் இடம் ஒதுக்கப்பட்டது. அப்போது அந்த மாணவர் வைத்திருந்த தாடியை மழிக்குமாறு கேட்டுக் கொள்ளப்பட்டதாகக் கூறப்படுகிறது.

Read More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *