• June 27, 2025
  • NewsEditor
  • 0

சென்னை: ‘ஓரணியில் தமிழ்நாடு’ உறுப்பினர் சேர்க்கை குறித்து திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில், மாவட்டச் செயலாளர்கள் உள்ளிட்டோருக்கான கூட்டம் சனிக்கிழமை (ஜூன் 28) காணொலி வாயிலாக நடைபெறும் என்று அக்கட்சியின் பொதுச் செயலாளர் துரைமுருகன் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “ஓரணியில் தமிழ்நாடு உறுப்பினர் சேர்க்கை” குறித்து, கட்சியின் தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில், மாவட்டச் செயலாளர்கள், நாடாளுமன்ற சட்டமன்ற உறுப்பினர்கள், சார்பு அணிச் செயலாளர்கள், தொகுதி பார்வையாளர்கள் கூட்டம், நாளை (ஜூன் 28) சனிக்கிழமை மாலை 6 மணிக்கு காணொலி காட்சி வாயிலாக நடைபெறும். அனைவரும் தவறாமல் கலந்துகொள்ள வேண்டும்” என்று அவர் கேட்டுக் கொண்டுள்ளார்.

Read More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *