• June 27, 2025
  • NewsEditor
  • 0

ஆன்மிக குரு, யோகா நிபுணர் மற்றும் எழுத்தாளர் என்று பன்முகம் கொண்ட குரு மித்ரேஷிவா எழுதியுள்ள ‘பணவாசம்’, ‘கருவிலிருந்து குருவரை’, ‘உனக்குள் ஒரு ரகசியம்’ ஆகிய நூல் வெளியீட்டு விழா சென்னை சர்.பிட்டி தியாகராஜர் அரங்கில் சற்று முன்னர் தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்த விழாவின் முதல் நிகழ்வாக பணத்தையும் மகிழ்ச்சியையும் ஒரே நேரத்தில் சம்பாதிக்கும் வழி என்ற தலைப்பில் குரு மித்ரேஷிவா உரையாற்றினார்

குரு மித்ரேஷிவாவின் நூல்

“மனிதன் எப்படி வாழ வேண்டும்..? உயிர் என்றால் என்ன..? மூச்சு என்றால் என்ன? வழக்கை என்றால் என்ன ? சந்தோஷம் என்றால் என்ன ? பிறப்பு என்றால் என்ன என்று பல்வேறு கேள்விகள் நிறைந்த நமது வாழ்க்கையை எப்படி வாழணும்..நமக்கும் சக உயிர்களுக்கும் 85 லட்சம் உயிரினங்களுக்கும் உண்டான தொடர்பு எப்படி இருக்கிறது, நான் ஏன் மனிதனாக பிறந்திருக்கிறேன், ஏன் ஆணாகப் பிறந்தேன் ஏன் இந்த ஊரில் வந்து பிறந்து இருக்கிறேன். ஏன் பெண்ணாக பிறந்தேன்.

பூமியில் 24 மணி நேரம் சுற்றிக் கொண்டிருக்கிறது சூரியனை, 365 1/4 நாள் சுத்தி வந்து கொண்டிருக்கிறது, அமாவாசை வருகிறது, பௌர்ணமி வருகிறது, திடீரென்று சுனாமி வருகிறது,கொரோனா வருகிறது, ஏன் என் வாழ்க்கையில சந்தோஷம் வருகிறது, துக்கம் வருகிறது, இதையெல்லாம் எப்படி யார் கட்டுப்படுத்துகிறார்கள் என்னுடைய வாழ்க்கை ஏன் எப்பொழுதும் மகிழ்ச்சியாக இல்லை, ஒரு ஏற்ற இறக்கத்தோடு ஏன் போகுது இது மாதிரி ஒரு ஆயிரம் கேள்விகளுக்கு நமக்கு விடை தெரியாது.

இது போன்ற விடை தெரியாத கேள்விகளுக்கு காரணம் இங்குள்ள கல்வி முறைதான். பொய் ஞானம், மெய் ஞானம் என்ற அடிப்படையில் கல்வி பயிலும் நாம் பணம் எட்டுவதை மட்டுமே குறிக்கோளாக கொண்டுள்ளோம். பொருள் மட்டுமே வாழ்க்கை என்று செல்லும்போது மகிழ்ச்சி வராது. ஆனால் மகிழ்ச்சி இருக்கும் இடத்தில் பொருள் வரும்.

அதாவது கல்வி படிக்க போய் படிக்கிறது மட்டுமல்ல ஒரு குழந்தை இந்த உலகத்தை பார்க்க ஆரம்பிச்ச அந்த தருணத்தில் இருந்து எல்லாத்தையும் கற்றுக் ஆரம்பிக்குது. இது முதல் கல்வி. எல்லாம் உள்ள போய் பதிவாகிட்டு இருக்கும். அடுத்தது ஒரு மொழி என்ற விஷயத்தை கத்துக்குறோம். ஏபிசிடி கத்துகிறோம். அதன் மூலமாக ஒரு மொழியை கற்றுக் கொள்கிறோம் அந்த மொழி மூலமாக பல சப்ஜெக்ட் பல விஷயங்கள் தெரிந்துகொள்கிறோம். கல்வி முறையில் மாற்றம் வேண்டும்.

குரு மித்ரேஷிவாவின் நூல்
குரு மித்ரேஷிவாவின் நூல்

அறிவு என்பது வெளியில் இருந்து வருவது, ஞானம் என்பது உள்ளுக்குள் இருந்து வருவது. எனக்கு 1330 திருக்குறளும் தெரியும் என்று சொன்னால் அது அறிவு. ஒரே ஒரு குறள் படி வாழ்ந்து காட்டினால் அதுதான் ஞானம். சந்தோசமாக இருக்கும் போது செல்வம் தேடி வரும். செல்வம் இருக்கும் இடத்தில் சந்தோசம் தேடி வரும் என்று சொல்ல முடியாது .

பணமும் மகிழ்ச்சியும் ஒரே நேரத்தில் எப்படி சம்பாதிக்க வேண்டும் என்று சொன்னால் மூன்று நிலைகளாக பிரிக்கலாம். ஒன்று இருப்பு நிலை, செயல்பாடு, மற்றும் பலன். இருப்பு நிலையில் செல்வத்தை எப்படி ஈர்ப்பது என்றும் அச்செல்வத்தை ஈர்ப்பதற்கு நம்முடைய செயல்பாடுகள் எப்படி அமைய வேண்டும் என்பதும் அதனால் ஈட்டக்கூடிய பொருள்தான் பலனாக நம் கைக்கு வந்து சேருகிறது . இதையே ஆங்கிலத்தில் beeing , doing And having என்று சொல்வார்கள்” என்றார்.

Read More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *