• June 27, 2025
  • NewsEditor
  • 0

ஆன்மிக குரு, யோகா நிபுணர் மற்றும் எழுத்தாளர் என்று பன்முகம் கொண்ட குரு மித்ரேஷிவா எழுதியுள்ள ‘பணவாசம்’, ‘கருவிலிருந்து குருவரை’, ‘உனக்குள் ஒரு ரகசியம்’ ஆகிய நூல் வெளியீட்டு விழா சென்னை சர்.பிட்டி தியாகராஜர் அரங்கில் சற்று முன்னர் தொடங்கி நடைபெற்று வருகிறது.

குரு மித்ரேஷிவா

விகடன் பிரசுரம் வெளியீடுகளான இந்தப் புத்தகங்களைப் பொருளாதார நிபுணர் நாகப்பன் , எழுத்தாளர் பட்டுக்கோட்டை பிரபாகர், இயக்குநர் லிங்குசாமி ஆகியோர் வெளியிட சி.கே .குமரவேல், ஜோதிடர் கே.பி . வித்யாதரன் மற்றும் பட்டிமன்ற பேச்சாளர் பாரதி பாஸ்கர் ஆகியோர் பெற்றுகொள்கிறார்கள்.

இந்த நூல் வெளியீட்டு விழாவில் தொழில் அதிபர் நல்லி குப்புசாமி தலைமை உரை வழங்கினார். “சமீபக் காலங்களில் நிறைய தமிழ் புத்தகங்கள் வெளி வருகின்றன. அடிக்கடி நடைபெறும் புத்தக விழாக்கள் அச்சுப் புத்தகத்திற்கும் வாசகர்களுக்கும் இருக்கும் செல்வாக்கை உணர்த்துகிறது.

நல்லி குப்புசாமி
நல்லி குப்புசாமி

குரு மித்ரேஷிவாவின் உரையை கேட்கக்கூடிய சூழல் எல்லோருக்கும் இருக்காது. அவர்களுக்கு இது பயனுள்ளதாக இருக்கும். சாதாரண மனிதர்களை அணுகுவது எப்படி, ஒரு நிலைமையில் இருக்கும் மனிதர்களை அணுகுவது எப்படி என்று குரு மித்ரேஷிவா இப்போது உரையாற்றினார். அது அனைவருக்கும் பயனுள்ளதாக இருக்கும். ‘பணவாசம்’புத்தகத்தை படித்துப் பார்த்தேன். அவர் சொல்லும் நிறைய விஷயங்களைக் கேட்க இங்கு வந்திருக்கிறேன். அவரிடம் இருந்து பல விஷயங்களை தெரிந்துக்கொள்ள நமக்கு வாய்ப்புகள் கிடைக்க வேண்டும்” என்று கேட்டுக்கொண்டிருக்கிறார்.

Read More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *